புதுச்சேரி

கோப்பு படம்.

சிவனடியார்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மனு

Published On 2023-04-20 14:54 IST   |   Update On 2023-04-20 14:54:00 IST
  • அரிச்சந்திரன் கோவிலை புனரமைக்க வேண்டும்.
  • உழவர்கரை நகராட்சியிடம் அனுமதிபெறவில்லை எனக்கோரி பணிகளை நிறுத்தியுள்ளனர்.

புதுச்சேரி:

கருவடிகுப்பம் சுடுகாடு நுழைவுவாயிலில் உள்ள அரிச்சந்திரன் கோவில் பழுதடைந்துள்ளது.

இந்த கோவிலை புனரமைக்கும் பணியில் நந்தீஸ்வரர் அறக்கட்டளை மற்றும் மாநில ஒருங்கிணைந்த சிவனடியார் பக்தர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

2 ஆண்டாக நடைபெறும் பணிக்கு இந்து அறநிலையத்துறை, உழவர்கரை நகராட்சியிடம் அனுமதிபெறவில்லை எனக்கோரி பணிகளை நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சிவன டியார்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோவில் புனரமைப்பு பணிகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி மனு அளித்தனர்.

Tags:    

Similar News