புதுச்சேரி

கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்த காட்சி.

கழிவுநீர் வாய்க்கால் வசதி - சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்

Published On 2023-10-31 09:13 GMT   |   Update On 2023-10-31 09:13 GMT
  • பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
  • மகளிர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து தானம்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை நகரில் சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.29 லட்சத்து 95 ஆயிரம் 343 மதிப்பீட்டில் கழிவு நீர் வாய்க்கால் அமைப்பதற்கான பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி தொடங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

இதில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் அகிலன், பாஜக விவசாய அணி பொறுப்பா ளர் ராமு, தானம்பா ளையம் பாஜக பிரமுகர்கள் ஞானசேகரன், சக்திவேல், கணேசன் தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், தவளக்குப்பம் கிருஷ்ண மூர்த்தி, முகாம்மிகை நகர் ஐய்யப்பன், சுந்தரமூர்த்தி, ஜி.ஞா னசே கர், ஜனார்த்தனன் மகளிர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News