புதுச்சேரி

 கவிஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட காட்சி.

சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் கருத்தரங்கம்

Published On 2023-03-28 10:15 IST   |   Update On 2023-03-28 10:15:00 IST
  • புதுவையில் சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் கவியரங்கம் நடைபெற்றது.
  • பொதுச்செயலர் கலியபெருமாள் நெறியாள்கையில் முத்தமிழே வணக்கம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

புதுச்சேரி:

புதுவையில் சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் கவியரங்கம் நடைபெற்றது. விழாவிற்கு கவிஞர் புதுவை. கோ.செல்வம் தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் வீரசேகரன், சுசீலா, மணிமேகலை, காமராஜ், ராஜாராம், விசாலாட்சி, பழனிபாஸ்கரன், பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொதுச்செயலர் கலியபெருமாள் நெறியாள்கையில் முத்தமிழே வணக்கம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

தொடர்ந்து நவீன தெருக்கூத்துக் கலைஞர் காந்திமேரி சிறப்புரையாற்றினார். பின்னர் கவிஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்த தமிழ்வளர்ச்சி சிறகத்தை கைவிட்டு தமிழ்வளர்ச்சித்தறையை அறிவிக்க வேண்டும். இதுவரை கொடுக்கப்படாத தமிழ்மாமணி விருதுகளை தலா ரூபாய் ஒரு லட்சம் தொகையுடன் வழங்க வேண்டும். அறிவிக்கப்பட்ட கலைமாமணி, கம்பன், தொல்காப்பியர் , நேரு விருதுகளை அடுத்த மாதம் 29-ந் தேதி நடைபெறும் பாரதிதாசன் விழாவில் முறைப்படி வழங்க வேண்டும் என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News