அரியாங்குப்பம் தொகுதியில் 100நாள் வேலைசெய்யும் பெண்களுக்கு பாஸ்கர் எம் எல் ஏ புடவைகள் வழங்கிய காட்சி.
100 நாள் வேலை செய்யும் 2 ஆயிரம் பேருக்கு புடவை-கைலி
- பாஸ்கர் எம்.எல்.ஏ. வழங்கினார்
- ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்ன தானம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சி எம். எல். ஏ. பாஸ்கர், முதல்- அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாளை தனது தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விமர்சியாக கொண்டாடு கிறார்.
அதன்படி அரியாங்குப்பம் தொகுதி முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதன் ஒரு பகுதியாக இன்று வீராம் பட்டிணம், காக்கா யந்தோப்பு. அரியாங்குப்பம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்தக்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு புடவை, கைலி, சக்கரை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து அந்த பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்ன தானம் வழங்கப்பட்டது.
மேலும் இன்று மாலை தேங்காய்திட்டு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பூஜை செய்து வடக்கு பேட் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வீட்டிற்கே சென்று புடவை சர்க்கரை தொகுப்புகள் வழங்கபட உள்ளது.
நாளைமுதல்-அமைச்சர் பிறந்தநாளில் காலை வீராம்பட்டிணம் செங்க ழுநீரம்மன் கோவிலில் அபிஷேக ஆராதனை செய்து 200 நபர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கவும், ஆர்.கே நகர் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் 108 பால்குடம் எடுக்கவும். அவர்களுக்கு புடவை. பால் குடம். இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கவும் ஏற்பாடு உள்ளது.
மேலும் நமது அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கும் விழாவில் அமைச்சர்கள் , எம்.எல்.ஏ.க்கள் மற்றும் என். ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி இலவச கண் கண்ணாடி, துப்புரவு தொழிலா ளர்களுக்கு நல உதவிகள். தொழில் உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்க உள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு புதுவை அரசு மூலம் கலைமாமணி விருது பெற்றவர்களும் மற்றும் காந்திராம் நற்பணி இயக்கம் சார்பாக அரசு போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி அளித்த ஆசிரியர்க ளும் கவுரவிக்கப்ப டவுள்ளது.