என் மலர்
நீங்கள் தேடியது "Bhaskar MLA"
- சுழற்சியில் முறை செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
- முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரை சந்தித்தனர்.
புதுச்சேரி
புதுவை மாநில மல்யுத்த சங்கத்தை சார்ந்த வீரர் தயாநிதி ஒரு நிமிடத்தில் 82 எளிகாப்டர் ஸ்பின் எனும் சுழற்சியில் முறை செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து அவர் புதுவை மல்யுத்த சங்க செயலாளர் மாஸ்டர் வினோத் தலைமையில் முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரை சந்தித்தனர். அவர் உலக சாதனை படைத்த வீரருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். நிகழ்ச்சியின் போது நிர்வாகிகள் செல்வம், சிலம்பரசன், பிரேம், சோமசுந்தரம், ஜெயஸ்டூ, தங்கபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
- மாணவர்களின் கிரிக்கெட் போட்டிகள் வீராம்பட்டினம் அபைஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
- ஆட்டநாயகன் விருது அபைஸ் கிரிக்கெட் அணியின் ரித்திக்குமரன் பெற்றார்.
புதுச்சேரி:
புதுவை யூனியன் கிரிக்கெட் அகாடமி மற்றும் சங்கத்தின் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களின் கிரிக்கெட் போட்டிகள் வீராம்பட்டினம் அபைஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டி பரிசளிப்பு விழாவிற்கு அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ பாஸ்கர் என்ற தட்சிணா மூர்த்தி. பாகூர் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியை வெரோனஸ் விஜயலட்சுமி வீராம்பட்டினத்தில் எம்.ஆர்.பி. கெஸ்ட் ஹவுஸின் உரிமையாளர் ராஜாராம் ஓய்வு பெற்ற ஆய்வாளர் மனோகர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
முதல் இடத்தை பிடித்த வீராம்பட்டினம் அபைஸ் கிரிக்கெட் அகாடமி அணிக்கு தொகுதி எம்.எல்.ஏ பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி முதல் பரிசு கோப்பையை வழங்கி வீரர்களுக்கு பதக்கத்தையும் அணிவித்தார்.
ஆட்டநாயகன் விருது அபைஸ் கிரிக்கெட் அணியின் ரித்திக்குமரன் பெற்றார். மேலும் அந்த அணியின் ரோகன் சிறந்த பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டார். ஜோதி மெமோரியல் கிரிக்கெட் அகாடமி அணியின் யுக்காஷ் சிறந்த பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார்.
போட்டியை திறம்பட நடத்திய புதுவை யூனியன் கிரிக்கெட் அகாடமி அண்ட் அசோசியேசன் சங்க நிர்வாகிகளையும் பாஸ்கர் எம்.எல்.ஏ வாழ்த்தி பாராட்டினார். கிரிக்கெட் போட்டி ஏற்பாடுகளை புதுவை யூனியன் கிரிக்கெட் அகாடமி மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் நடத்தி முடித்தனர்.
- பாஸ்கர் எம்.எல்.ஏ. வழங்கினார்
- ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்ன தானம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சி எம். எல். ஏ. பாஸ்கர், முதல்- அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாளை தனது தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விமர்சியாக கொண்டாடு கிறார்.
அதன்படி அரியாங்குப்பம் தொகுதி முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதன் ஒரு பகுதியாக இன்று வீராம் பட்டிணம், காக்கா யந்தோப்பு. அரியாங்குப்பம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்தக்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு புடவை, கைலி, சக்கரை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து அந்த பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்ன தானம் வழங்கப்பட்டது.
மேலும் இன்று மாலை தேங்காய்திட்டு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பூஜை செய்து வடக்கு பேட் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வீட்டிற்கே சென்று புடவை சர்க்கரை தொகுப்புகள் வழங்கபட உள்ளது.
நாளைமுதல்-அமைச்சர் பிறந்தநாளில் காலை வீராம்பட்டிணம் செங்க ழுநீரம்மன் கோவிலில் அபிஷேக ஆராதனை செய்து 200 நபர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கவும், ஆர்.கே நகர் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் 108 பால்குடம் எடுக்கவும். அவர்களுக்கு புடவை. பால் குடம். இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கவும் ஏற்பாடு உள்ளது.
மேலும் நமது அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கும் விழாவில் அமைச்சர்கள் , எம்.எல்.ஏ.க்கள் மற்றும் என். ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி இலவச கண் கண்ணாடி, துப்புரவு தொழிலா ளர்களுக்கு நல உதவிகள். தொழில் உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்க உள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு புதுவை அரசு மூலம் கலைமாமணி விருது பெற்றவர்களும் மற்றும் காந்திராம் நற்பணி இயக்கம் சார்பாக அரசு போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி அளித்த ஆசிரியர்க ளும் கவுரவிக்கப்ப டவுள்ளது.
- பாஸ்கர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- புதியதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது.
அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினம் தேரோடும் வீதியில் சுமார் ரூ.25 லட்சம் செலவில் புதியதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது.
பாஸ்கர் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை தலைமை செயற்பொறியாளர் பழனியப்பன், செயற்பொறியாளர் திருஞானம், உதவி பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலை பொறியாளர் முருகன், ஒப்பந்ததாரர் அழகர், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






