புதுச்சேரி

சன்னியாசி தோப்பில் சமாதி திருவிழாவில் கென்னடி எம்.எல்.ஏ. வழிபாடு செய்த காட்சி.

சன்னியாசி தோப்பில் சமாதி திருவிழா-கென்னடி எம்.எல்.ஏ. வழிபாடு செய்தார்

Published On 2023-03-21 04:51 GMT   |   Update On 2023-03-21 04:51 GMT
  • புதுவை அருகே திப்புராயப்பேட்டை சன்னியாசி தோப்பில் அமைந்துள்ள கல்லறையில் சமாதி திருவிழா நடைபெற்றது.
  • இதில் உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.

புதுச்சேரி:

புதுவை மாநில 21 கிராம ஆதிதிராவிடர் பஞ்சாயத்து குழு கூட்டமைப்பு சார்பில் திப்புராயப்பேட்டை சன்னியாசி தோப்பில் அமைந்துள்ள கல்லறையில் சமாதி திருவிழா நடைபெற்றது.

அதில் முன்னோர்களின் சமாதியை சீர்செய்து சமாதி திருவிழாவை சிறப்பாக செய்து பொதுமக்கள் வழிபட்டனர். இதில் உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.

நிகழ்ச்சியில் பெரும்பா லான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு சடங்குகளை செய்தனர், விழாவில் தி.மு.க. கட்சி நிர்வாகிகள், புதியவன், கன்னியப்பன்,மூர்த்தி, நோயல், மணிகண்டன், தேசீர், பேட்டை ரஜினி, மகிமை, பெருமாள்,சரவணன், மொயிஸ், சக்திவேல், அறிவழகன், ஈசாக், தர்ஷனா, தஸ்தான், லாரன்ஸ், ஆனந்த், மோரீஸ், தமிழா, செரேஞ்சீவி மற்றும் உப்பளம் தொகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News