புதுச்சேரி

கோப்பு படம்.

கிராம திட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Published On 2023-07-28 11:59 IST   |   Update On 2023-07-28 11:59:00 IST
  • மக்களை முன்னேற்றம் அடைய செம்மையாக பணி செய்து கொண்டிருக்கும் நாங்கள் கடந்த 4 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் இருந்தோம்.
  • அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் இணைப்பு சங்கங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

புதுச்சேரி:

புதுச்சேரி கிராம திட்ட ஊழியர்கள் சங்க தலைவர் ராஜ்குமார் செயலாளர் கருணைபிரகாசம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரப்பதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு உருவாக்கி கிராமப்புற மக்களை முன்னேற்றம் அடைய செம்மையாக பணி செய்து கொண்டிருக்கும் நாங்கள் கடந்த 4 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் இருந்தோம்.

தற்போது ஊதிய உயர்வு வழங்கிய முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சாய்.ஜ.சரவணன்குமார். ஊரக வளர்ச்சி துறை செயலர் நெடுஞ்செழியன், திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி மற்றும் புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் இணைப்பு சங்கங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News