புதுச்சேரி

 வீராம்பட்டினத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.

வீராம்பட்டினத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

Published On 2023-10-30 08:27 GMT   |   Update On 2023-10-30 08:27 GMT
  • அணிவகுப்பில் புதுவை அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், பா.ஜனதா மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.
  • ஆர்.எஸ்.எஸ்.வட தமிழக அமைப்பு செயலர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

புதுச்சேரி:

புதுவை ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) சார்பில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் 200-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சுவாமி விவேகானந்தர், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் தேசியச் சிந்தனைகள் நினைவூட்டல் விழா ஆகிய முப்பெரும் விழா வீராம்பட்டினத்தில் நடந்தது.

விழாவை முன்னிட்டு வீராம்பட்டினம் செங்கழு நீரம்மன்கோவிலில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.ஊர்வலம் புறப்பட்டது. மகளிர் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி வழியனுப்பினர். காக்கி, வெள்ளை சீருடை அணிந்த ஆர்.எஸ்.தொண்டர்கள் கையில் தடி ஏந்தியவாறு மேள, தாளம் முழங்க அணிவகுத்து வந்தனர்.

அணிவகுப்பில் புதுவை அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், பா.ஜனதா மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.

வீராம்பட்டினம் முக்கிய வீதிகளில் வந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி அரியாங் குப்பத்தில் நிறைவடைந்தது. பேரணி நிறைவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நாயர் தலைமை வகித்தார். தொழிலதிபர் ஆர்.துளசிராம் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்.வட தமிழக அமைப்பு செயலர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். புதுவை மாவட்டத் தலைவர் ஸ்ரீனிவாசன், கோட்டத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர். பொதுக் கூட்டத்தின்போது பேரவைத்தலைவர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News