புதுச்சேரி

சாலை பணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

ரூ.21 லட்சம் செலவில் சாலை பணி-பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2023-11-24 08:23 GMT   |   Update On 2023-11-24 08:23 GMT
  • தார் சாலை அமைக்கும் பணிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.
  • நகராட்சி ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அந்த பகுதியை சார்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் பகுதியில் புதியதாக அமைந்துள்ள சப்தகிரி கார்டன் மெயின் ரோடு மற்றும் உட்புற சாலைகளுக்கு கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.

இதேபோல் முத்தியால்பேட்டை லூயி கண்ணையா நகர் தோட்டம் பகுதிக்கு கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய தார்சாலை அமைக்கும் பணிக்கும் மொத்தம் ரூ.21.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கு வதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.

2 பணிகளையும் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம், நகராட்சி ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அந்த பகுதியை சார்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News