பள்ளி மாணவர்களுக்கு அரிசி மற்றும் ரெயின்கோட் ஜான்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி, ரெயின்கோட்
- ஜான்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
- மாணவர்களுக்கு இலவச அரிசி தலா 7கிலோ மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
புதுச்சேரி:
காமராஜர் நகர் தொகுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி, ரெயின்கோட் ஜான்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
புதுச்சேரி அரசு கல்வி துறை சார்பில் காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட சாரம் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் பள்ளியில் 6,7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச அரிசி தலா 7கிலோ மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமலதா சாந்தி தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு அரிசி மற்றும் ரெயின் கோட் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.