கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய காட்சி.
தனியார் பங்களிப்புடன் நீர்நிலைகள் புனரமைப்பு
- நீர்நிலைகளை புணரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது.
- உடற்பயிற்சி செய்ய ஏதுவாக உபகரணங்கள், நடைபாதை புல்வெளிகள் அமைக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவையில் உள்ள அரசு குடியிருப்புகள், குடியிருப்பு பகுதியில் உள்ள பூங்காக்கள் மற்றும் நீர்நிலைகளை புணரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது.
கூட்டத்திற்கு கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார். தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, நிதித்துறைச் செயலர் ஜவகர், நகர மற்றும் கிராமத் திட்டமிடல்துறைச் செயலர் கேசவன், கவர்ன ரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, துணை வனப் பாதுகாப்பு அதிகாரி வஞ்சுளவல்லி, பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர்சத்தியமூர்த்தி மற்றும் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை, மின்துறை, வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவர்னர் தமிழிசை அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய நடவடிக்கைகள் வருமாறு:-
புதுவையில் உள்ள அரசு குடியிருப்புகளை பயன்பாட்டுக்கு உகந்த வகையில் புனரமைத்து சீரமைக்க வேண்டும். மிஷன் பார்க் தொடங்கப்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் பூங்காக்கள் அமைக்க வேண்டும்.
தற்போது உள்ள பூங்காக்களை சீரமைக்க வேண்டும். மக்கள் நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய ஏதுவாக உபகரணங்கள், நடைபாதை புல்வெளிகள் அமைக்க வேண்டும். குழந்தைகள் பூங்காக்கள் அமைத்து விளையாட்டு உபகர ணங்களை நிறுவ வேண்டும். நீர் நிலைகளை முறையாக புனரமைத்து பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.வீணாக கடலில் கலக்கும் நீரினை சிறு சிறு குளங்கள் அமைத்து தேக்கி பயன்ப டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் இயற்கை சூழலை ஏற்படுத்த வேண்டும். பூங்காக்கள் மற்றும் நீர்நிலைகளை புனரமைக்க தனியார் பங்களிப்புடன் இணைந்து பணியாற்றலாம். இவ்வாறு தமிழிசை கூறினார்.