புதுச்சேரி

அம்பேத்கர் சிலையை சுற்றி புதர்கள் அகற்றப்பட்ட காட்சி.

அம்பேத்கர் சிலையை சுற்றி புதர்கள் அகற்றம்

Published On 2022-10-17 04:37 GMT   |   Update On 2022-10-17 04:37 GMT
  • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாண–ரப்பேட்டை சாலையில் பல மாதங்களாக எரியாமல் இருந்த மின்விளக்குகளை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி உத்தரவின் பேரில் இளநிலை பொறியாளர் சுரேஷ் அனைத்து மின்விளக்குகளையும் புதியாக மாற்றியமைத்து எரிய வைத்துள்ளார்.
  • பிறகு மின்விளக்கு பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை சாலையில் பல மாதங்களாக எரியாமல் இருந்த மின்விளக்குகளை ெதாகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி உத்தரவின் பேரில் இளநிலை பொறியாளர் சுரேஷ் அனைத்து மின்விளக்குகளையும் புதியாக மாற்றியமைத்து எரிய வைத்துள்ளார்.

அப்போது உப்பளம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு புதியதாக மின்விளக்கு அமைத்த போது அங்கு புதர் மண்டி கிடந்ததால் மின்சாரம் கொண்டு வருவதில் சிக்கல் இருந்து வந்தது.

ஆகையால் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தலைமையில் தி.மு.க.வினர் புதுவை நகராட்சி ஊழியர்கள் மூலம் அம்பேத்கர் சிலையை சுற்றி இருந்த செடி, கொடி, மரம் உள்ளிட்ட புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பிறகு மின்விளக்கு பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. பிறகு அங்குள்ள செயற்கை நீருற்றையும் சீரமைப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இளநிலை பொறியாளர் துரைசண்முகம், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள் அஷரப், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News