புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் மீனவ பஞ்சாயத்தார் பேச்சு வார்த்தை நடத்திய காட்சி.

பிணத்தை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் - முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை

Published On 2023-09-28 14:46 IST   |   Update On 2023-09-28 14:46:00 IST
  • தீக்குளித்த கலைச்செல்வி சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.
  • போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

புதுச்சேரி:

காலாப்பட்டு போலீஸ்நி லையத்தில் தீக்குளித்த கலைச்செல்வி சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.

இத்தகவல் கலைச்செல்வியின் குடும்பத்தினர், உறவினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 10 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் காலாப்பட்டு காவல்நிலையம் அருகே ஒன்று கூடி மறியல் போராட்டத்துக்கு தயாராகினர். தகவலறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா, சூப்பிரண்டு பக்தவச்சலம் மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

தகவலறிந்த கல்யாண சுந்தரம் எம்எல்ஏ அங்கு வந்தார். அவர்களிடம் கோரிக்கைகளை முதல அமைச்சரிடம் தெரிவியுங்கள் என கூறினார். அதற்கு அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை பிணத்தை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்தனர்.

காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, பிள்ளை ச்சாவடி, கனகசெட்டிகுளம் ஆகிய 4 மீனவ கிராம பஞ்சாயத்தார் சட்டசபைக்கு வந்தனர். அங்கு முதல்-அமைச்சரை சந்திக்க கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ அறையில் அவர்கள் காத்திருந்தனர். மதியம் 12.30 மணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்தார்.

எம்.எல்.ஏ.வோடு முதல்-அமைச்சர் ரங்கசாமியை  சந்தித்தனர். அப்போதும் தீக்குளிப்பை போலீசார் தடுக்காததோடு அந்த பெண்ணுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதால் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் போலீசார் மீது வழக்கு பதிவு செய்து சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்றும் உயிரிழந்த பெண்ணின் குடும்த்திற்கு ரூ 25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

முடிவு தெரியும் வரை பிணத்தை பெற மாட்டோம் என கூறினர். இதனையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ முதல்-அமைச்சருடன் பேசி தகவல் தெரிவிப்பதாக கூறினார். இதனை ஏற்று மீனவ பஞ்சாயத்தார் சட்டமன்ற வளாகத்தில் காத்திருந்தனர்.இதனிடையே காலாப்பட்டு பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News