புதுச்சேரி

போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.

மண்டல அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி

Published On 2022-08-18 09:21 GMT   |   Update On 2022-08-18 09:21 GMT
  • கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான மகளிர் கூடைப்பந்து விளையாட்டு போட்டி புதுவை ஜிப்மர் வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
  • போட்டியில் தமிழ்நாடு, புதுவையை சேர்ந்த கேந்திர வித்யாலயா பள்ளி மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.

புதுச்சேரி:

கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான மகளிர் கூடைப்பந்து விளையாட்டு போட்டி புதுவை ஜிப்மர் வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

போட்டியில் தமிழ்நாடு, புதுவையை சேர்ந்த கேந்திர வித்யாலயா பள்ளி மாணவிகள் கலந்து கொள்கின்றனர். போட்டியின் முதல் நாளான இன்று கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வர் ஜோஸ்மேத்யு வரவேற்றார். புதுவை கூடைப்பந்து சங்க செயலாளர் ரகோத்தமன் வாழ்த்துரை வழங்கினார்.

புதுவை பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி துறை பேராசிரியை சுல்தானா போட்டியை தொடங்கி வைத்தார்.

போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி பெறுவார்கள். போட்டிக்கான ஏற்பாடுகளை கேந்திரிய வித்யாலயா பள்ளியின் உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் குமார், வீரா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News