புதுச்சேரி

புத்தாக்க பயிற்சியை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்து ரொட்டி பால் ஊழியர்களுக்கு பரிசு வழங்கினார்.

உணவு சமைப்போர்- ரொட்டி பால் ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

Published On 2023-08-25 08:33 GMT   |   Update On 2023-08-25 08:33 GMT
  • அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு
  • கல்வித்துறை துணை இயக்குனர் கொஞ்சுமொழி குமரன் வரவேற்றார்.

புதுச்சேரி:

புதுவை அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் மதிய உணவு சமைப்பவர், ரொட்டிபால் ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி கருவடிகுப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது.

கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்து ஊழியர்களின் கடமைகள், முக்கியத்துவம் குறித்தும், அவர்களின் கடின உழைப்பையும் பாராட்டி, கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் சத்தியசாய் அன்னபூர்ணா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஸ்ரீமதுசூதன்சாய் பிறந்தநாளையொட்டி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிறு தானிய மிட்டாய் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கல்வித்துறை துணை இயக்குனர் கொஞ்சுமொழி குமரன் வரவேற்றார். கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு நன்றி கூறினார். கல்வித்துறை துணை இயக்குனர் சிவராமரெட்டி, அறக்கட்டளை தேசிய மேலாளர் அல்லட்சந்தோஷ் வாழ்த்தி பேசினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை இயக்குனர் கொஞ்சுமொழி குமரன் தலைமையில் அதிகாரிகள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News