புதுச்சேரி

ராஜீவ் காந்தி என்ஜினீயரிங் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்த காட்சி.

ராஜீவ் காந்தி என்ஜினீயரிங் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

Published On 2022-08-09 04:56 GMT   |   Update On 2022-08-09 04:56 GMT
  • டாடா எலக்ஸி நிறுவனத்தின் சார்பில் இறுதி ஆண்டுக்கு பயிலும் மாணவர்களின் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
  • இதில் டாடா எலக்ஸி நிறுவனத்தில் இருந்து 11 மனித வள மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை நடத்தினர்.

புதுச்சேரி:

கிருமாம்பாக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் டாடா எலக்ஸி நிறுவனத்தின் சார்பில் இறுதி ஆண்டுக்கு பயிலும் மாணவர்களின் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

இந்த முகாமினை கல்லூரி முதல்வர் விஜய் கிருஷ்ணா ரபாக்கா, துணை முதல்வர் அய்யப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் டாடா எலக்ஸி நிறுவனத்தில் இருந்து 11 மனித வள மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை நடத்தினர்.

முன்னதாக அந்நிறுவனத்தின் சென்னைமற்றும் பெங்களூரு மண்டல மனிதவள மேலாளர், மாணவர்க ளுக்கு நிறுவனத்தின் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் பணிகள் குறித்து விளக்கினர்.

மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு தொழில்நுட்பத் தேர்வு மற்றும் மனிதவள தேர்வு என 3 கட்டங்களாக தேர்வுகள் நடத்தி 17 மாணவர்களுக்கு வேலைக்கான பணி ஆணையை வழங்கினர். பணியில் சேர்ந்தவர்க ளுக்கு ஆண்டிற்கு ரூ. 3.5 லட்சம் சம்பளம் கிடைக்கும்.

முகாமிற்கான ஏற்பாடு களை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் சேதுமாதவன், மக்கள் தொடர்பு அதிகாரி ஜெரார்டு, கணக்கு மேலாளர் ராஜேஷ்குமார் கொண்ட குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News