புதுச்சேரி

வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை அமலோற்பவம் பள்ளி முதுநிலை முதல்வர் லூர்து சாமி பாராட்டிய காட்சி.

வினாடி-வினா போட்டி

Published On 2022-11-16 05:10 GMT   |   Update On 2022-11-16 05:10 GMT
  • அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு தோறும் பள்ளிக்களுக்கிடையே வினாடி-வினாப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
  • பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆன்டோனியோஸ் பிரிட்டோ வரவேற்று பேசினார்.

புதுச்சேரி:

அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு தோறும் பள்ளிக்களுக்கிடையே வினாடி-வினாப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அதன் படி இந்த ஆண்டு வினாடி-வினா போட்டி அமலோற்பவம் லூர்து அகாடமி பள்ளி (சி.பி.எஸ்.இ) லூர்து உள் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் 10 பள்ளிகளை சேர்ந்த 110-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இளநிலை,முதுநிலை என 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு பிரிவிலும் 3 பரிசுகள் வழங்கப்பட்டது. இளநிலை பிரிவில் முதல் இடத்தை செயிண்ட் பேட்ரிக் பள்ளி 2-வது இடத்தை செயிண்ட் ஜோசப் ஆப் குளூனி 3-வது இடத்தை பெத்தி செமினார் பள்ளி பிடித்தது. முதுநிலை பிரிவில் முதல் இடத்தை பெத்தி செமினார் பள்ளி 2-வது இடத்தை செயிண்ட் பேட்ரிக் பள்ளி 3-வது இடத்தை செயிண்ட் ஜோசப் ஆப் குளூனி பள்ளி பிடித்தது.

பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆன்டோனியோஸ் பிரிட்டோ வரவேற்று பேசினார். அமலோற்பவம் பள்ளி நிறுவனர், தாளாளர், முதுநிலை முதல்வர் லூர்து சாமி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு ரூ.8 ஆயிரத்து 500 வழங்கி பாராட்டினார்.

இது போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை கூர்மையாக்கி கொள்ளவும் வெளிபடுத்தவும் வேண்டும் என்று பங்கேற்ற மாணவர்கள் அனைவரையும் உற்சாக படுத்தினார். இந்த ஆண்டிற்கான வினாடி-வினா சுழற்கோப்பையை செயிண்ட் பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெற்றது. முடிவில் பள்ளி முதல்வர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News