புதுச்சேரி

நேரு எம்.எல்.ஏ. ஏழைகளுக்கு புத்தாடைகள் வழங்கிய காட்சி.

சுப்புராயப்பிள்ளை நினைவு நாளையொட்டி ஏழைகளுக்கு புத்தாடை

Published On 2023-06-20 13:42 IST   |   Update On 2023-06-20 13:42:00 IST
  • சின்னா சுப்பராயப்பிள்ளையின் 148-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
  • அவரின் நினைவிடத்தில நேரு எம்.எல்.ஏ. மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி:

புதுவை நகராட்சி அறப்பணி அவை சார்பில் சின்னா சுப்பராயப்பிள்ளையின் 148-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

மறைமலை அடிகள் சாலை கென்னடி நகர் சுப்புராயப்பிள்ளை சத்திரத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில நேரு எம்.எல்.ஏ. மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஏழைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் , புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், சுகாதார அதிகாரி துளசிராமன், பொறுப்பாளர் விஜயலட்சுமி மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News