புதுச்சேரி

வீரர்கள் பதக்கங்கள் குவித்து சாதனை படைத்து பரிசு பெற்ற காட்சி.

புதுவை வீரர்கள் பதக்கங்கள் குவித்து சாதனை-முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

Published On 2022-08-20 14:23 IST   |   Update On 2022-08-20 14:23:00 IST
  • சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குங்பூ சாம்பியன்ஷிப் போட்டியில்புதுவை குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 12 வீரர்கள்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.
  • 2 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

புதுச்சேரி:

சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குங்பூ சாம்பியன்ஷிப் போட்டியில்புதுவை குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 12 வீரர்கள்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இவர்கள் 2 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். புதுவைக்கு திரும்பிய வீரர்கள் முன்னாள் துணைசபாநாயகர் டி.பி.ஆர். செல்வம் தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் ஞானசேகரன், பழனிராஜ், புருஷோத்தமன் மற்றும் அணி நிர்வாகிகள் ரகுநாதன், முருகானந்தம், லோகேஷ், ரவிக்குமார், சந்தோஷ், பொற்செல்வன் மற்றும் பயிற்சியாளர்கள் தனசேகரன், அஸ்வின், கிருபைராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News