புதுச்சேரி

கோப்பு படம்.

தனியார் நிறுவன காவலாளி மாயம்

Published On 2023-06-25 07:53 GMT   |   Update On 2023-06-25 07:53 GMT
  • சம்பவத்தன்று முத்துகுமரன் ஓட்டலுக்கு சென்று டிபன் வாங்கி வருவதாக கூறி சென்றார்.
  • மனைவி விஜி தனது கணவர் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார்.

புதுச்சேரி:

வில்லியனூர் ஆரணி வீதியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது55). இவருக்கு விஜி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

முத்து குமரன் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று காலை முத்துகுமரன் ஓட்டலுக்கு சென்று டிபன் வாங்கி வருவதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் எங்கும் முத்துகுமரன் இல்லை. இதையடுத்து அவரது மனைவி விஜி தனது கணவர் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News