பா.ஜனதா நிர்வாகிகள் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
- நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் தமிழக பகுதிகளில் போராட்டங்கள், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது.
- கோட்டகுப்பம் அடுத்த அனுமந்தையில் வசித்து வரும் விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா தலைவர் ஏ.டி ராஜேந்திரன் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் தமிழக பகுதிகளில் போராட்டங்கள், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது.
இந்நிலையில் புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் வசிக்கும் விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் ஜி.கே ராஜன் வீட்டிற்கு ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு மேற்பார்வையில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் கோட்டகுப்பம் அடுத்த அனுமந்தையில் வசித்து வரும் விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா தலைவர் ஏ.டி ராஜேந்திரன் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரத்தில் இருந்து ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு முக்கிய இடங்களில் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதலாக கோட்டகுப்பத்தில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.