புதுச்சேரி
பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி பதிவு கருத்தரங்கு
- கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டிய முறைகள் குறித்து செயல்முறை விளக்க கருத்தரங்கு ஓட்டல் அக்கார்டில் நடந்தது.
- புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வியா பாரிகள் சங்க செயலாளர் சுதாகர், முன்னாள் செயலாளர் அசோகன், நிஷாந்த் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பொறுப்பை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கே வழங்கியுள்ளது. இதற்கான தனி கணினி கண்காணிப்பு வலைதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த வலைதளத்தில் பதிவு செய்யும் வழிகள், கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டிய முறைகள் குறித்து செயல்முறை விளக்க கருத்தரங்கு ஓட்டல் அக்கார்டில் நடந்தது.
புதுவை மாசு கட்டுப்பாட்டு குழுவின் உறுப்பினர் செயலர் ரமேஷ் பங்கேற்று விளக்கமளித்தார். புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் சங்க செயலாளர் சுதாகர், முன்னாள் செயலாளர் அசோகன், நிஷாந்த் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.