புதுச்சேரி

கோப்பு படம்.

முதுநிலை மருத்துவ படிப்புக்கு 3-ம் கட்ட மாப்-அப் கலந்தாய்வு

Published On 2023-09-21 08:30 GMT   |   Update On 2023-09-21 08:30 GMT
  • கவர்னருக்கு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை
  • மாணவர்கள் தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலையில் காலியாக உள்ள இடங்க ளிலும் விண்ணப்பித்து பயன்பெற ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

புதுச்சேரி:

புதுவை மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கு அகில இந் திய அளவில் நடைபெற உள்ள 3-ம் கட்ட மாப்-அப் கலந்தாய்வுக்கு பி.ஜி. நீட் நுழைவுத்தேர்வு 2023-24 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்திருந்தா லும் விண்ணப்பிக்கலாம் என ஆணையை பிறப்பித் துள்ளது.

எனவே தற்போது புதுவை மாநில அரசால் சென்டாக் கமிட்டி மூலம் நடத்தப்பட்ட 2-ம் கட்ட முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முடிவடையும் நிலையில், 3-ம் கட்ட மற்றும் மாப்-அப் கலந்தாய்விற்கு புதுவை மாநிலத்தை இருப்பிடமாகக் கொண்டு, சென்டாக் மூலம் விண்ணப்பிக்க ஒரு வாய்ப்பை பெற்றுள்ளனர்.

அதேபோல், எம்.சி.சி.யால் நடத்தப்படவுள்ள 3-ம் கட்ட மாப்-அப் கலந்தாய் வில் அகில இந்திய ஒதுக் கீட்டில் இதுவரை நிரப்பப் படாமல் காலியாக உள்ள மாணவர்கள் விரும்பி பயிலும் இருதய நோய்சார்ந்த படிப்பு, குழந்தைநல மருத்துவம், எலும்பு சம்மந்தப்பட்ட மருத்துவ படிப்பு, தோல் சிகிச்சை, நுண் கதிரியியல், ரேடியாலஜி, மன நோய், நரம்பியல் போன்ற முக்கியமான பாடப்பிரிவு களுக்கு புதுவை மாநிலத் தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள் அகில இந்திய அளவில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டிலும், பணம் படைத்த செல்வந்தர் மாணவர்கள் தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலையில் காலியாக உள்ள இடங்க ளிலும் விண்ணப்பித்து பயன்பெற ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

எனவே, புதுவை அரசும், புதுவை சுகா தாரத்துறையும், திருத்தப் பட்ட புதிய மதிப்பெண் அடிப்படையில் முது நிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட மாப்-அப் கலந்தாய்வினை சென்டாக் மூலம் நடத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News