புதுச்சேரி

பயனாளிகளுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மனைப் பட்டா வழங்கிய காட்சி.

பயனாளிகளுக்கு பட்டா-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்

Published On 2023-01-09 14:50 IST   |   Update On 2023-01-09 14:50:00 IST
  • மங்கலம் தொகுதியில் ஏழை பயனாளிகளுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் 240 பயனாளிகளுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்கினார்.
  • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயபால், முன்னாள் வாரிய தலைவர்கள் பாலமுருகன், ரேவதி பற்குணன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

மங்கலம் தொகுதியில் ஏழை பயனாளிகளுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் 240 பயனாளிகளுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்கினார்.

தொடர்ந்து மங்கலம் தொகுதியில் ஏழைகளுக்கு அரசு கொடுத்த மனைப்பட்டாவுக்கு புதிய வழிகாட்டு மதிப்பீடுடன் கூடிய மனைப்பட்டாவை 700 பயனாளிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயபால், முன்னாள் வாரிய தலைவர்கள் பாலமுருகன், ரேவதி பற்குணன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News