புதுச்சேரி

ஓவியப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு கென்னடி எம்.எல்.ஏ. பரிசு வழங்கய காட்சி. அருகில் பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ், உள்ளார்.

ஓடும் ரெயிலில் ஓவியப்போட்டி

Published On 2023-08-14 06:10 GMT   |   Update On 2023-08-14 06:10 GMT
  • புதுச்சேரி திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் ஓடும் ரெயிலில் ஓவியப்போட்டி நடைபெற்றது.
  • திருமண மண்டபத்தில் பரிசளிப்பு விழா நடந்தது.

புதுச்சேரி:

புதுச்சேரி திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் ஓடும் ரெயிலில் ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் 5 முதல் 7-ம் வகுப்பு வரை, 8 முதல் 10-ம் வகுப்பு வரை என இரு பிரிவுகளாக நடந்தது. ஓடும் ரெயிலில் நடை பெற்ற இந்த ஓவியப்போட்டியில் புதுச்சேரி முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண் டனர்.

தூய்மை இந்தியா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப் புகளில் இப்போட்டி நடத் தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 55 பேருக்கு புஸ்சி வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. இதில் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்துகொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங் கினார்.

நிகழ்ச்சியில் பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ், கலைக்கூட துணை தலைவர் கோவிந்தராஜ், ஓவிய ஆசிரியர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News