புதுச்சேரி

நெல்லித்தோப்பு தொகுதி பா.ஜனதா மண்டல செயற்குழு கூட்டம் நடந்த காட்சி.

பா.ஜனதா மண்டல செயற்குழு கூட்டம்

Published On 2023-03-04 14:45 IST   |   Update On 2023-03-04 14:45:00 IST
  • பாரதீய ஜனதா கட்சி நெல்லித்தோப்பு தொகுதியின் மண்டல் செயற்குழு கூட்டம் சாரம் சக்தி நகரில் தொகுதி தலைவர் உமாபதி தலைமையில் நடந்தது.
  • மாநில விவசாய அணி தலைவர் புகழேந்தி கலந்து கொண்டு கட்சியின் உள்கட்டமைப்பு நிர்வாகிகள் திறன் மேம்படுத்துதல் வருங்கால தொகுதியில் வளர்ச்சி மேம்பாட்டு பற்றி சிறப்புரையாற்றினார்கள்.

 புதுச்சேரி:

பாரதிய ஜனதா கட்சி நெல்லித்தோப்பு தொகுதியின் மண்டல் செயற்குழு கூட்டம் சாரம் சக்தி நகரில் தொகுதி தலைவர் உமாபதி தலைமையில் நடந்தது. மூத்த தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்கள் சண்முகம், பூங்குன்றனார், ரேணுகாதேவி, தொகுதி பொதுச் செயலாளர் மூர்த்தி, சுனிதா தேவி ஆகியோர் வரவேற்றனர்.

தொகுதி பொறுப்பாளர் ரிசார்ட் ஜான் குமார் எம்.எல்.ஏ. நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், மாநிலச் செயலாளர் மற்றும் நகர, மாவட்ட பொறுப்பாளர் ரத்தினவேல், மாநில விவசாய அணி தலைவர் புகழேந்தி கலந்து கொண்டு கட்சியின் உள்கட்டமைப்பு நிர்வாகிகள் திறன் மேம்படுத்துதல் வருங்கால தொகுதியில் வளர்ச்சி மேம்பாட்டு பற்றி சிறப்புரையாற்றினார்கள். மாநில விவசாய அணி தலைவர் புகேழந்தி கேந்திர பொருப்பாளரிடம் விசாரணை நடத்தினார். 

முடிவில் நகர மாவட்ட விவசாய அணி பொதுச்செயலா ளர் சவுரிராஜன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News