புதுச்சேரி

கோப்பு படம்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு அரசாணை-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவிப்பு

Published On 2023-03-15 14:28 IST   |   Update On 2023-03-15 14:28:00 IST
  • குரூப் ‘பி’ பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்குவதில் மிகுந்த அக்கறை காட்டியுள்ளார் என்றார்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கேள்வி நேரம் முடிவடைந்த வுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் பேசும்போது, குரூப் 'பி' பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. முதல் நடைமுறைக்கு வருகிறது. முதல்-அமைச்சர் மிகவும் பிற்படுத்தப்பட்டோரு க்கான இடஒதுக்கீடு வழங்குவதில் மிகுந்த அக்கறை காட்டியுள்ளார் என்றார். அப்போது எதிர்கட்சித்தலைவர் சிவா, தி.மு.க.

எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், செந்தில்குமார் ஆகியோர் இடஒதுக்கீட்டில் சில சந்தேகங்களை எழுப்பினர். அப்போது அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசாணை நகல் வழங்கப்படும் என்றார். முன்னதாக கேள்விநேரத்தின்போது தி.மு.க. எம்.எல்.ஏ. கென்னடி, அரசிதழில் பதிவு பெறாத குரூப் 'பி' பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் முன் பாக அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தப்படுமா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், குரூப் 'பி' பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உட்பட அனைத்து உட்பிரிவினருக்கும் இடஒதுக்கீடு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News