புதுச்சேரி

செல்போன் டவரை அமைப்பதை தடுக்க கோரி முற்றுகையிட்ட பொதுமக்கள்.

குடியிருப்பு பகுதியில் தனியார் 5-ஜி செல் போன் டவர் அமைக்க எதிர்ப்பு

Published On 2023-07-12 13:36 IST   |   Update On 2023-07-12 13:36:00 IST
  • பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
  • குடியிருப்பு ஒட்டிய பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் செல்போன் நிறுவனம் 5-ஜி டவரை நிறுவி வருகிறது.

புதுச்சேரி:

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே குடியிருப்பு அருகில் தனியார் 5-ஜி செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் தெரிவித்ததால் செல்போன் டவர் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட ஜவகர் நகர் அருகே கைலாசநாதர் நகர் உள்ளது. இந்தப் பகுதியில் குடியிருப்பு ஒட்டிய பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் செல்போன் நிறுவனம் 5-ஜி டவரை நிறுவி வருகிறது. கடந்த 10 நாட்களாக செல்போன் டவர் அமைக்கும் பணி நடை பெற்று வரும் விரைவில் டவர் அமைக்க குழி தோண்டும் போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து செல் போன் டவர் அமைக்கும் பணி முடிந்து விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்க டேசன் தலைமையில் அங்கு சென்று செல்போன் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்து ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது செல்போன் டவரை முற்றுகையிட்ட பொதுமக்களை சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர். மேலும் செல்போன் டவர் அமைக்கும்பணி நிறுத்த ப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News