புதுச்சேரி

நீர், மோர் பந்தலை மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் தொடங்கி வைத்த காட்சி.

பத்துக்கண்ணு சந்திப்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

Published On 2023-04-20 14:52 IST   |   Update On 2023-04-20 14:52:00 IST
  • பொது மக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.
  • கட்சியின் தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை பத்துக்கண்ணு சந்திப்பில் மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் தலைமையில் நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நீர்மோர் வழங்கும் பணியானது ஒரு மாத காலத்திற்கு தொடர்ந்து பத்துக்கண்ணு சந்திப்பில் நடைபெறும். இதனை முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் புதுவை மாநில பொதுச் செயலாளர் சங்கர் ஊசுடு வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர்பாபு ரெட்டியார், மாநிலச் செயலாளர் லோகையன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து அப்பகுதியாக வந்து செல்லும் கனரக வாகன ஓட்டுனர்கள் பொது மக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், எஸ்சி, எஸ்டி பிரிவு பொதுச் செயலாளர் சேட்டு என்ற செங்கேணி, ஊசுடு வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் வேலு, மாநில சிறப்பு அழைப்பாளர் பாபு என்ற பழனிராஜா மற்றும் தொண்டமானதாம் குமார், ராமநாதபுரம் செல்வமணி, உசுடு தொகுதி பொதுச் செயலாளர்கள் சுபான், ராஜா என்கிற ராஜேந்திரன், சோனி விநாயகம், லோக நாதன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்வப் பிரியன், ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேந்தர், ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் உதயகுமார், ஊடக பிரிவு தலைவர் வெங்கடேஷ், காங்கிரஸ் கட்சி உறுப்பி னர்கள் பரமசிவம், பாவாடை ராயன், சக்திவேல், ராஜா, சந்திரன், அங்காளன், வினோத், ஐயப்பன், வசந்த் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News