- ஓடும் பஸ்சில் முதியவர் இறந்து போனார்.
- இவர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
புதுச்சேரி:
ஓடும் பஸ்சில் முதியவர் இறந்து போனார்.
நாமக்கல் மாவட்டம் வேட்டுவாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது52). இவர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகாததால் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடிவு செய்தார்.
இதையடுத்து அவரை உறவினர் மணி(வயது67) என்பவர் நேற்று பஸ்சில் புதுவைக்கு அழைத்து வந்தார். புதிய பஸ் நிலையத்தில் பஸ் நின்றதும் நடராஜனை இருக்கையில் இருந்து எழுப்ப முயன்ற போது அவர் அசைவற்று காணப்பட்டார். இதைத்தொடர்ந்து நடராஜனை ஒரு ஆட்டோவில் கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் . அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நடராஜன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஓடும் பஸ்சிலேயே நடராஜன் இறந்து போனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது உறவினர் மணி கொடுத்த புகாரின் பேரில் உருளை யன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.