கோப்பு படம்.
ரெயிலில் தவறி விழுந்து முதியவர் பலி
- ரெயில்வே ஊழியர் இது பற்றி ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு புகார் தெரிவித்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை விழுப்புரத்துக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் ரெட்டியார் பாளையம் வயல்வெளி நகரில் உள்ள ரெயில்வே கேட்டை கடந்து சென்ற போது ரெயில் பெட்டியில் இருந்து ஒரு பயணி எதிர்பாராத விதமாக தவறி கிழே விழுந்தார்.
சுமார் 55 மதிக்கத்தக்க அந்த பயணி தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் இறந்து போனார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அந்த ரெயில்வே கேட்டில் பணியிலிருந்த ஊழியர் கோலியிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ரெயில்வே ஊழியர் இது பற்றி ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு புகார் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரெயிலில் தவறி விழுந்து இறந்த அந்த முதியவர் காட்பாடிக்கு ரெயில் டிக்கெட் எடுத்து இருந்தார். எனவே அவர் காட்பாடி பகுதியை சேர்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.