காரைக்காலில் எருமை மாட்டிடம் மனு கொடுத்து நூதன போராட்டம் நடத்திய காட்சி.
எருமை மாட்டிடம் மனு கொடுத்து நூதன போராட்டம்
- விவசாய கூட்டுறவு கடன்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தது.
- எருமை மாட்டுக்கு மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவையை ஆளும் என்.ஆர் பி.ஜே.பி கூட்டணி அரசு ஆட்சி அமைத்த போது விவசாய கூட்டுறவு கடன்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தது.
ஆட்சி அமைந்து 2 1/2 ஆண்டு காலம் கடந்த பிறகும் இதுவரை அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால் விவசாயிகள் மீண்டும் கடன் பெற முடியாத சூழ்நிலை உள்ளது. இதனை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு போரா ட்டங்கள் நடத்தப்பட்டது.
கடனை தள்ளுபடி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்தும், விவசாய கூட்டுறவு கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் எருமை மாட்டுக்கு மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் கடற்கரை சாலை சிங்காரவேலர் சிலையில் இருந்து தொடங்கிய பேரணி காமராஜர் வீதி வழியாக வந்து காமராஜர் நிர்வாக வளாகத்தை வந்தடைந்தது அங்கு எருமை மாட்டுக்கு அகில இந்திய விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.