இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் உறுதி மொழி எடுத்த போது எடுத்த படம்.
காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
- புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- கில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்னா ஜெரால்டு, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
புதுச்சேரி:
புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஆனந்தபாபு நடராஜன், துணைத்தலைவர்களாக கல்யாணசுந்தரம், சேகர், ஜமீர்அகமதுஅல்பாசி, குணசேகர், ஜெயராமன், கோவளன், டேனியல்ராஜ், கயல்விழி ஆகியோரும், 23 தொகுதிகளுக்கான வட்டார தலைவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஆனந்தபாபு நடராஜன் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றனர்.
பதவியேற்பு விழாவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்னா ஜெரால்டு, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் முன்னாள் அமைச்சர்கள் வல்சராஜ், கந்தசாமி, ஷாஜகான், கமலகண்ணன், பெத்தபெருமாள், ரமேஷ்பரம்பத்
எம்.எல்.ஏ., முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் வேல்முருகன், காங்கிரஸ் நிர்வாகிகள் தனுசு, ரகுமான், இளையராஜா, ஆர்.இ.சேகர், வீரமுத்து, குணசேகரன், வக்கீல் மருதுபாண்டி, எஸ்.எம்.ஏ. கருணாநிதி, சிறப்பு அழைப்பாளர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக ராஜாதியேட்டர் அருகில் இருந்து புதிய நிர்வாகிகள் தலைவர் ஆனந்தபாபுநடராஜன் தலைமையில் மோட்டார்சைக்கிளில் ஊர்வலமாக வந்தனர்.