என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new Congress"

    • புதுவை மாநில காங்கிரஸ் கட்சியில் 57 வட்டார தலைவர்கள் உள்ளனர். இதில் 33 பேர் பெங்களூரு சென்று புதுவை மாநில பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவை சந்தித்து பேசினர்.
    • காங்கிரசின் கோட்டையான புதுவையில் வருகிற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்தான் நிற்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சியில் 57 வட்டார தலைவர்கள் உள்ளனர்.

    இதில் 33 பேர் பெங்களூரு சென்று புதுவை மாநில பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவை சந்தித்து பேசினர். அப்போது புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. ஆனால் மாநில தலைவர் யார்? என கட்சித்தலைமை அறிவிக்கவில்லை. இது கட்சியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

    தனித்தனியே டெல்லிக்கு சென்று கட்சித் தலைவர்களை சந்திக்கின்றனர். இது நிர்வாகிகளிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

    புதுவையில் கட்சி தலைவர்களை அழைத்து பேசி ஒருமித்த தலைமையை ஏற்படுத்த வேண்டும். காங்கிரசின் கோட்டையான புதுவையில் வருகிற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்தான் நிற்க வேண்டும். இதுகுறித்தும் காங்கிரஸ் தலைவர்களிடம் பேச வேண்டும் என வலியுறுத்தினர்.

    • புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    • கில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்னா ஜெரால்டு, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஆனந்தபாபு நடராஜன், துணைத்தலைவர்களாக கல்யாணசுந்தரம், சேகர், ஜமீர்அகமதுஅல்பாசி, குணசேகர், ஜெயராமன், கோவளன், டேனியல்ராஜ், கயல்விழி ஆகியோரும், 23 தொகுதிகளுக்கான வட்டார தலைவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஆனந்தபாபு நடராஜன் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றனர்.

    பதவியேற்பு விழாவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்னா ஜெரால்டு, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விழாவில் முன்னாள் அமைச்சர்கள் வல்சராஜ், கந்தசாமி, ஷாஜகான், கமலகண்ணன், பெத்தபெருமாள், ரமேஷ்பரம்பத்

    எம்.எல்.ஏ., முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் வேல்முருகன், காங்கிரஸ் நிர்வாகிகள் தனுசு, ரகுமான், இளையராஜா, ஆர்.இ.சேகர், வீரமுத்து, குணசேகரன், வக்கீல் மருதுபாண்டி, எஸ்.எம்.ஏ. கருணாநிதி, சிறப்பு அழைப்பாளர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக ராஜாதியேட்டர் அருகில் இருந்து புதிய நிர்வாகிகள் தலைவர் ஆனந்தபாபுநடராஜன் தலைமையில் மோட்டார்சைக்கிளில் ஊர்வலமாக வந்தனர்.

    ×