கோப்பு படம்.
யூ.டி.சி தேர்வு விண்ணப்பத்தில் குளறுபடியை களைய வேண்டும்
- அமைச்சக ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்
- நிர்வாக பணியாளர் சீர்த்தி ருத்தத்துறை முழு பொறுப்பேற்று விடுப்பட்டோர் அனைவரும் விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்.
புதுச்சேரி:
புதுவை ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
116 யூ.டி.சி காலிபணி யிடங்களுக்கான விண்ண ப்பங்களை வரவேற்று அதற்கான அறிவிப்பாணையை நிர்வாகம் மற்றும் பணியாளர் சீர்த்திருத்தத்துறை கடந்த கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிட்டது.
இந்த யூ.டி.சி பதவிக்கான வி ண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பி க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தெளிவான அறிவுறு த்தல்கள், வழிகாட்டுதல்கள் இல்லாததால் பல இளைஞர்கள் ஆன்லைன் மூலம் யூ.டி.சி பதவிக்காக விண்ணப்பித்தும், விண்ணப்பங்கள் நிர்வாக பணியாளர் சீர்த்திருத்தத்துறைக்கு சென்று சேரவில்லை. இதனால் யூ.டி.சி பதவிக்கான போட்டி தேர்வில் அவர்கள் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு பறிபோய் உள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பொழுது தகவல்களை பதிவேற்றம் செய்வதற்கு பிறகு கணினியில் பதிவேற்றம் செய்த தகவல்கள் அனைத்தையும் சரியானதா? என உறுதி செய்யப்பட்ட பின்பே சமர்பிக்கும் முறையை கொடுக்க தவறியதன் விளைவாக விண்ணப்பங்கள் சரியாக சென்றடையவில்லை. இதர பணியாளர் தேர்வாணையங்கள் அனைவரும் புரியும் வகையில் குழப்பம் ஏற்படாமல் இருக்க தெளிவாக குறிப்பிடுகின்றன.
அதே போல் நிர்வாக பணியாளர் சீர்த்திருத்தத்துறையும் தெளிவாக குறிப்பிட்டி ருந்தால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது. இதனால் நிர்வாக பணியாளர் சீர்த்தி ருத்தத்துறை முழு பொறுப்பேற்று விடுப்பட்டோர் அனைவரும் விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும். முதல்-அமைச்சர் இவ்விவ காரத்தில் தலையிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.