புதுச்சேரி

 ஓய்வு பெற்ற துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி  வைத்த காட்சி.

நவராத்திரி கொலு திருவிழா

Published On 2023-10-16 07:04 GMT   |   Update On 2023-10-16 07:04 GMT
  • 9 நாட்கள் நடக்கிறது
  • ஓய்வு பெற்ற துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி:

திருவண்டார்கோவிலில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலை ப்பள்ளியில் நவராத்திரி கொலு திருவிழா கொண்டாடும் வகையில் பள்ளி வளா கத்தில் கொலு பொம்மை கள் வைக்க ப்பட்டு நவராத்திரி ஹோமங்கள் நடைபெற்றது.

கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. விழாவினை பள்ளியின் சேர்மன் அந்தோணிராஜ், பள்ளியின் முதல்வர் மிஸ்டிகன் ஆண்டோ ரிச்சர்ட் மற்றும் ஓய்வு பெற்ற துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி

வைத்தனர். விழாவில் முப்பெரும் தேவியர்களுக்கு அர்ச்சனை மலர்கள், பழங்கள், நைவேத்தியம் கொண்டு பூஜைகள் செய்யப்பட்டன.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ெகாலு திருவிழா தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறுகிது. விழாவி ற்கான ஏற்பா டுகளை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் அலுவலர் ஊழியர்கள் செய்திருந்தனர். 

Tags:    

Similar News