எம்.வி.ஆர். மருத்துவ மைய ஆண்டு விழா கொண்டாடப்பட்ட காட்சி.
எம்.வி.ஆர். மருத்துவ மைய ஆண்டு விழா
- கருவடிக்குப்பத்தில் இயங்கி வருகிறது.
- கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு கடற்கரை சாலை கருவடிக்குப்பத்தில் இயங்கி வரும் எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் 11-ம் ஆண்டு விழா நடைபெற்றது.
மருத்துவ மையத்தின் இயக்குனர் மற்றும் நிறுவனர் டாக்டர் எம்.ஆர்.வித்யா தலைமையில், இணை மருத்துவ இயக்குனர் டாக்டர் தேவநாதன், டாக்டர் வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
விழாவில் பொறியாளர் வாசு கலந்து கொண்டு, எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் பணியாற்றி வரும் ஊழி யர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் டாக்டர் எம்.ஆர்.வித்யா பேசுகையில், இந்த மருத்துவ மையமானது கடந்த 11 ஆண்டுகளாக புதுவை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை செய்து வருகிறது.
பல்லாயிரக்கணக்கான அறுவை சிகிக்சைகள் மற்றும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹீமோடயலிஸிஸ் மூலம் மருத்துவ சேவையாற்றி, நமது தரமான மருத்துவ சேவைக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் மற் றும் என்.ஏ.பி.எச். என்ட்ரி லெவல் அங்கீகாரம் ஆகியவைகள் பெற்றுள்ளோம். புதிதாக நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு, மேம்படுத்தப்பட்ட விபத்து மருத்துவப்பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.