புதுச்சேரி

முத்தியால்பேட்டை முத்தையசாமி கோவில் தேரோட்டத்தில் பக்தர்கள் வீதிதோறும் தேங்காய் உடைத்து வழிபட்ட காட்சி.

முத்தியால்பேட்டை முத்தையசாமி கோவில் தேரோட்டம்

Published On 2023-04-03 13:40 IST   |   Update On 2023-04-03 13:40:00 IST
  • புதுவை முத்தி யால்பேட்டை முத்தையா முதலியார் பேட்டையில் உள்ள முத்து மாரியம்மன் முத்தையசாமி கோவிலில் 29-வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது.
  • வீதி தோறும் மூட்டை மூட்டையாய் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி:

புதுவை முத்தி யால்பேட்டை முத்தையா முதலியார் பேட்டையில் உள்ள முத்து மாரியம்மன் முத்தையசாமி கோவிலில் 29-வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது.

பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 25-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தினமும் சாமிக்கு அபிஷேக, ஆராதனைள் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது.தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். வீதி தோறும் மூட்டை மூட்டையாய் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News