கோப்பு படம்.
2 இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு
- யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது.
- மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
புதுச்சேரி:
வில்லியனூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் வயது 24 இவர் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுவனத்தின் வாயிலில் நிறுத்திவிட்டு பணியில் ஈடுபட்டார்.
பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து யுவராஜ் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை சண்முகாபுரம் வி.பி.சிங். நகரை சேர்ந்தவர் தமிழ்வேந்தன் வயது 39) இவர் ஜிப்மரில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் காலை ஜிப்மரில் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பணிக்கு செல்வது வழக்கம்.
அதுபோல் சம்பவத்தன்று காலை தமிழ்வேந்தன் தனது மோட்டார் சைக்கிளை இரு சக்கரவாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு பணியில் ஈடுபட்டார். பின்னர் பணி முடிந்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் திடுக்கிட்டார். மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து தமிழ்வேந்தன் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.