புதுச்சேரி

எம்.ஐ.டி கல்லூரியில் உலக தர நிர்ணய நாள் கருத்தரங்கு நடைபெற்ற காட்சி.

எம்.ஐ.டி. கல்லூரியில் உலக தர நிர்ணய நாள் கருத்தரங்கு

Published On 2023-10-28 04:34 GMT   |   Update On 2023-10-28 04:34 GMT
  • உலக தரநிர்ணய நாள் சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
  • டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுச்சேரி:

மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி(எம்.ஐ.டி.) இயந்திரவியல் துறை மற்றும் இந்திய பொறியாளர் அமைப்பு சார்பில் "உலக தரநிர்ணய நாள் சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்துரை வழங்கினார். இந்திய பொறியாளர் அமைப்பின் புதுவை மாநில தலைவர் மற்றும் இயந்திரவியல் துறைத் தலைவர் ராஜாராம் வரவேற்புரை நிகழ்த்தினார். புதுவை டி.வி.எஸ் சுந்தரம் பாஸ்டநர்ஸ் தரக்கட்டுப்பட்டு துறை பொறியாளர் சாயேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கருத்தரங்கில் இயந்திரவியல் துறை மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் கணேஷ் குமார் நன்றி கூறினார்.

கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, இயந்திரவியல் துறை பேராசிரியர் மதியரசு மற்றும் உதவி பேராசிரி யர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News