புதுச்சேரி

எம்.ஐ.டி. கல்லூரியில் பொறியாளர்கள் தினவிழா நடந்த காட்சி.

எம்.ஐ.டி. கல்லூரியில் பொறியாளர்கள் தினவிழா

Published On 2023-09-19 07:22 GMT   |   Update On 2023-09-19 07:22 GMT
  • 53- வது தேசிய பொறியாளர்கள் தின விழா மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி கருத்தரங்ககூடத்தில் நடைபெற்றது.
  • மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

புதுச்சேரி:

மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி (எம்.ஐ.டி.) இந்திய பொறியாளர் அமைப்பு, இயந்திரவியல் துறை மாணவர் அமைப்பு இணைந்து 53- வது தேசிய பொறியாளர்கள் தின விழா மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி கருத்தரங்ககூடத்தில் நடைபெற்றது.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்துரை வழங்கினார்.

இந்திய பொறியாளர் அமைப்பின் புதுவை மாநில தலைவர் மற்றும் இயந்திரவியல் துறை தலைவர் ராஜாராமன் வரவேற்று பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பொறியாளர் ராஜகுமாரன் வலுவான, பாதுகாப்பான மற்றும் எளிதில் கற்கும்படியான பொறியியல் நெகிழ்திறம் மிக்க எதிர்காலத்தை உருவாக்குதல் எனும் தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார்.

மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் கணேஷ்குமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News