புதுச்சேரி

முதலியார் பேட்டை தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம், அசோக் பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் சிவப்பு ரேஷன் அட்டைகள் வழங்கிய போது எடுத்த படம்.

பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் அட்டைகள்-அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்

Published On 2023-01-29 05:01 GMT   |   Update On 2023-01-29 05:01 GMT
  • வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டுகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார். முதலியார்பேட்டை பா.ஜனதா., எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு அசோக் பாபு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
  • நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் செல்வகணபதி எம்.பி. தொகுதி தலைவர் இன்பசேகர், நகர மாவட்ட துணை தலைவர்கள் குமார், விஜயரங்கம், மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டுகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

முதலியார்பேட்டை பா.ஜனதா., எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு அசோக் பாபு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் 60 பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் செல்வகணபதி

எம்.பி. தொகுதி தலைவர் இன்பசேகர், நகர மாவட்ட துணை தலைவர்கள் குமார், விஜயரங்கம், மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி, மீனவரணி துணைத்தலைவர் நடராஜ், வர்த்தக பிரிவு தலைவர் சத்தியராஜ் விவசாய அணி அய்யனார், தொகுதி பொதுச்செயலாளர்கள் விஜயகுமார், பாலகுரு, மாநில செயற்குழு உறுப்பி னர்கள் கமலக்கண்ணன், திரிச்சந்திரன், ஓ.பி.சி. அணி லட்சுமி, மகளிர் அணி புவணேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News