புதுச்சேரி
மாதா தூண் அர்ச்சிப்பு-எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்பு
- வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தில் பேராயர் பிரான்சிஸ் கலிஸ் தலமையில் கல் மாதா தூண் அர்ச்சிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
- நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்று லூர்து அன்னை மாதாவினுடைய தூணை அர்ச்சித்து ஆசிர்வாதம் பெற்றார்.
புதுச்சேரி:
வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தில் பேராயர் பிரான்சிஸ் கலிஸ் தலமையில் கல் மாதா தூண் அர்ச்சிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
பேராயர் பிரான்சிஸ் கலிஸ் 32 அடி உள்ள ஒரு கல் வில்லியனூர் தூய லூர்து அன்னை மாதாவினுடைய தூணை மந்திரித்து அர்ச்சித்து ஆசிர்வதித்து திறந்து வைத்தார்.
அனைத்து பணிகளையும் திருத்தலத்தினுடைய அதிபர் பிச்சைமுத்து அடிகளார், உதவி தந்தை ஜீவா பங்கு பேரவை மக்களோடு இணைந்து ஒருங்கிணைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்று லூர்து அன்னை மாதாவினுடைய தூணை அர்ச்சித்து ஆசிர்வாதம் பெற்றார். பேரவை நிர்வாகிகள் மற்றும் தி.மு.க . நிர்வாகிகள் தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், சபரிநாதன், பாஸ்கர், மந்திரிகுமார், ஹரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.