புதுச்சேரி

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

ரேசன்கடைகளை திறக்க கோரி மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-29 14:27 IST   |   Update On 2023-06-29 14:27:00 IST
  • செயற்குழு உறுப்பினர் ராமச் சந்திரன்,மூத்த தலைவர் முருகன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.
  • அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்

புதுச்சேரி:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி புதுவை நகரக்குழு சார்பில் காந்திவீதி- முத்துமாரியம்மன் கோவில் வீதி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகர செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் ராமச் சந்திரன்,மூத்த தலைவர் முருகன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.

நிர்வாகிகள் கலியமூர்த்தி, பிரபுராஜ், சரவணன், ஜோதிபாசு, மணவாளன், வீரமணிகண்டன், தாட்சாயிணி, மது, ரஞ்சித், பாரி, சுப்பிரமணியன், மனோகர், விஜி, வனஜா கண்டன உரையாற்றினர்.

மார்க்சிஸ்ட்டு மாநில செயலாளர் ராஜாங்கம் சிறப்புரையாற்றினார். மணவாளன் நன்றி கூறினார்.

புதுவை அரசு ரேஷன்க டைகளை திறந்து அத்தி யாவசிய பொருட்களை வழங்க வேண்டும்.

குடும்பதலைவிக்கு ரூ.ஆயிரம், சிலிண்டருக்கு ரூ.300 மானியம், பெண்களுக்கு இலவச பஸ் வசதியை செய்துதர வேண்டும். ஏழை மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

Similar News