புதுச்சேரி

யூத் டாக் போட்டியில் வெற்றி பெற்ற மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவருக்கு சான்றிதழ் வழங்கிய காட்சி.

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் முதலிடம்

Published On 2023-10-15 12:44 IST   |   Update On 2023-10-15 12:44:00 IST
  • 3200 மாணவர்கள் கலந்து கொண்டு இந்த போட்டியில் 120 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
  • செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் அனைத்துத்துறை டீன்கள் மற்றும் துறைத்தலைவர்கள் பாராடினர்.

புதுச்சேரி:

ஐ.சி.டாக் அகாடமியின் யூத் டாக் போட்டி 7 பகுதிகளாக சென்னை மதுரை திருச்சி, கோவை, திருநெல்வேலி, சேலம் மற்றும் புதுவையில் நடத்தப்பட்டது.

பல்வேறு கல்லூரிகளில் இருந்து மொத்தம் 3200 மாணவர்கள் கலந்து கொண்டு இந்த போட்டியில் 120 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதிலிருந்து அரை இறுதி போட்டியில் 12 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதன் இறுதி போட்டியில் இதன் இறுதி போட்டியில் புதுவை மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த மாணவர் ரோகித் முதலிடமும், மாணவர் யுவசக்தி 2-ம் இடமும் மாணவி ஷிவானி 3-ம் இடமும் பெற்று சாதனை படைத்தனர்.

சாதனை படைத்த மாணவர்களை மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி தலைவரும் நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் அனைத்துத்துறை டீன்கள் மற்றும் துறைத்தலைவர்கள் பாராடினர்.

Tags:    

Similar News