மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி தேனீ. வளர்ப்பு பயிற்சி முகாம்
- கரியமானிக்கத்தில் உள்ள வேளாண் பண்ணையில் நடைபெற்றது.
- தேனீ வளர்ப்பு முறை பற்றி சிறப்பு பயிற்சி அளித்தார்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் ன்ஜினீயரிங் கல்லூரியின் கீழ் இயங்கிவரும் வேளாண் அறிவியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை மாணவர்களுக்கான நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் தேனீ.வளர்ப்பு பயிற்சி முகாம் நெட்டப்பாக்கம் தொகுதி கரியமானிக்கத்தில் உள்ள வேளாண் பண்ணையில் நடைபெற்றது.
மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாரன் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடா ஜலபதி ஆகியோரின் வழிகாட்டுதல்களுடன் நடைபெற்ற பயிற்சி முகாமில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர், வேளாண் விரிவாக்கத்துறை உதவி பேராசிரியர், ரேவதி, பூச்சியியல் துறை, உதவி பேராசிரியை இலக்கியா, தோட்டக்கலைத்துறை, மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை உதவி பேராசிரியர் ராஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளை வழிநடத்தினர்.
இம்முகாமின் சிறப்பு அழைப்பாளராக புதுவை மாநில தேனீ வளர்ப்பு பண்ணை உரிமையாளர், சந்துரு கலந்து கொண்டு தேனீ வளர்ப்பு முறை பற்றி சிறப்பு பயிற்சி அளித்தார்.