புதுச்சேரி

பி.ஐ.எம். பயிற்சி மையத்தில் படித்து அரசு பணிக்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பாராட்டிய காட்சி.

அரசு பணிக்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

Published On 2023-09-11 14:50 IST   |   Update On 2023-09-11 14:50:00 IST
  • விழாவிற்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசுகள் வழங்கினார்.
  • பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் 50 சதவீதம் இடங்களை பிடித்துள்ளனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப எல்.டி.சி. மற்றும் யூ.டி.சி. தேர்வுகள் நடத்தப்பட்டது.

இதில் புதுச்சேரி பிர்லியண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் மேத்தமெட்டிக்ஸ் (பி.ஐ.எம்.) பயிற்சி மையத்தில் படித்த 95 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றமாணவர்களுக்கு பாராட்டு விழா நேற்று மதியம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சபரி வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்தது. விழாவிற்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சபரி வித்யாஷ்ரம் பள்ளி தாளாளர் அமுதவாணன், பிர்லியண்ட் இன்ஸ்டிடியூட் ஆப்மேத்தமெட்டிக்ஸ் பயிற்சி மைய இயக்குனர்கள் நெடுஞ்செழியன், ஸ்ரீதரன், குமார், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டர்.

இந்த பயிற்சி மையத்தில் படித்த மாணவர் அசோக்குமார் எல்.டி.சி. தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதே போல் இந்த பயிற்சி மையத்தில்

படித்த மாணவர்கள் 50 சதவீதம் இடங்களை பிடித்துள்ளனர்.

Tags:    

Similar News