புதுச்சேரி
கோப்பு படம்.
பிரெஞ்சு பேசும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்
- கொட்டுப்பாளையம் நவீன மீன் அங்காடி சுகாதார வளாகத்தில் பிரெஞ்சு வேலை வாய்ப்பு முகாமை நடத்துகிறது.
- 12-ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்ற நன்கு பிரெஞ்சு பேசத் தெரிந்த இளைஞர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.
புதுச்சேரி:
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம், நவயுகா கன்சல்டன்சி இணைந்து நாளை (சனிக்கிழமை) கொட்டுப்பாளையம் நவீன மீன் அங்காடி சுகாதார வளாகத்தில் பிரெஞ்சு வேலை வாய்ப்பு முகாமை நடத்துகிறது.
காலை 9 முதல் மதியம் 2 மணி வரை சென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீஸ் நிறுவனத்தின் பிரெஞ்சு வாடிக்கையாளர் சேவை பணிக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது.
முகாமில் 12-ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்ற நன்கு பிரெஞ்சு பேசத் தெரிந்த இளைஞர்கள் அனைவரும் பங்கேற்கலாம். மாத சம்பளமாக ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.