புதுச்சேரி

கோப்பு படம்.

பேனர் காட்டிய சுயேட்சை எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவிப்பு

Published On 2023-03-09 15:08 IST   |   Update On 2023-03-09 15:08:00 IST
  • புதுவை சட்டசபையில் பேனர், பதாகைகளை எடுத்துவரக்கூடாது என உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தடை விதித்திருந்தார்.
  • உங்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்றார் அப்போது நேரு எம்.எல்.ஏ. குறுக்கிட்டு, ஜனநாயகப்படி பேனர் காட்டுவது அனைத்து சட்டமன்றத்திலும் உள்ளது என்றார்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் பேனர், பதாகைகளை எடுத்துவரக்கூடாது என உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தடை விதித்திருந்தார். இந்நிலையில் கூடிய பட்ஜெட் உரையின்போது சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பேனரை எடுத்து வந்து காட்டினார்.

பின்னர் வெளிநடப்பு செய்தார். பின்னர் 15 நிமிடம் கழித்து மீண்டும் சபைக்கு திரும்பினார். கவர்னர் உரை முடிந்ததும் அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழியனுப்பி வைத்துவிட்டு மீண்டும் சபைக்கு வந்தார்.

அப்போது நேரு எம்.எல்.ஏ. எழுந்து, நான் பதவியில் இருக்கிறேனோ? இல்லையா? நான் சபையில் இருக்க வேண்டுமா? வெளியேற வேண்டுமா? மாநில உரிமைக்காக என் கருத்தை தெரிவித்தேன் என கூறினார். அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கடந்த சட்டசபை கூட்டத்தின்போதே, சபைக்குள் பேனர், பதாகை போன்றவற்றை எடுத்து வரக்கூடாது என கூறினோம். அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் இது பொருந்தும்.

சட்டசபைக்கு ஒரு மாண்பு உள்ளது. அதை மீறினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். உங்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்றார் அப்போது நேரு எம்.எல்.ஏ. குறுக்கிட்டு, ஜனநாயகப்படி பேனர் காட்டுவது அனைத்து சட்டமன்றத்திலும் உள்ளது எனறார்.

அதற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தமிழக சட்டசபையில் ஒரு பேப்பரை கிழித்ததற்கு பதவிநீக்கமே செய்துள்ளனர். உங்களுக்கென தனியாக சட்டம் கிடையாது, விளக்கம் திருப்தியளிக்காவிட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News