புதுச்சேரி

பக்தர்கள் கூட்டு தியானத்தில் ஈடுபட்ட காட்சி.

அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை அறை திறப்பு

Published On 2023-11-17 08:47 GMT   |   Update On 2023-11-17 08:47 GMT
  • மீரா அல்பாசா 1878-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார்.
  • அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் சர்வதேச நகரை உருவாக்கினார்.

புதுச்சேரி:

பக்தர்களால் அன்னை என அழைக்கப்படும் மீரா அல்பாசா 1878-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார்.

மகான் அரவிந்தரின் யோக முறைகள் கவர்ந்ததால் இந்தியாவுக்கு வந்தார். அரவிந்தர் வாழ்ந்த புதுவையிலேயே தங்கி அவரின் ஆன்மிக பணிகளுக்கு துணையாக இருந்தார். அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் சர்வதேச நகரை உருவாக்கினார்.

அன்னை 1973-ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதி மகா சமாதியடைந்தார். அன்னையின் 50-ம் ஆண்டு மகா சமாதி தினம் இன்று அரவிந்தர் ஆசிரமத்தில் அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி இன்று காலையில் கூட்டு தியானம் நடந்தது. காலை 6 முதல் மதியம் 12 மணி வரை அன்னை வாழ்ந்த அறை, அவர் பயன்படுத்திய பொருட்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டிருந்தது.

பல நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அன்னை சமாதியை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News